திருவள்ளூர் அருகே இருக்கும் பொன்னேரியில் புதியதாக சிக்கன் பிரியாணி கடை ஒன்று திறக்கபட்ள்ளது. விற்பனையை அதிகரிக்க எண்ணிய உரிமையாளர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பிரியாணியை 1 ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அச்செய்தி மக்களிடம் காட்டுத்தீயாக பரவ கடையில் கூட்டம் அலைமோதியது.
நேற்று பூ வாங்கிய சுந்தரி திருத்தணி இரண்டாவது ரயில்வே கேட் வழியாக செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் அவ்வழியாக ரேணிகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைக்கவனிக்காத சுந்தரி, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்து ரயில், சுந்தரி மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த திருகண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (17). செங்குன்றம் எம்.ஏ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது. இதல் சுரேந்தர், உடன் படிக்கும் நண்பரான சோத்து பெரும்பேடு பகுதியை சேர்ந்த தனுஷ்பாலாஜி (17) உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை குளியலறைக்கு சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரில் குழந்தை நித்திய ஸ்ரீ தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடல் வெந்து வலியில் துடித்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள் பாலாவை காப்பற்ற கழிவு நீர் என்றும் பாராமல் வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசமாளித்து வந்தனர். ஆனாலும் பாலா பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளுர் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.
இன்று அதிகாலையில் தச்சூர் அருகே இருக்கும் பெரவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே கார் ஒன்று வேகமாக லாரியில் உரசும்படி வந்துள்ளது. கார் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை ஓட்டுநர் திருப்பி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக சென்று நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.
திருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் வாக்குப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, கடும் நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே பச்சிளம் பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற தம்பதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.