கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து, ரயில் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பேருந்து, ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களாலும், அத்தியாவசிய தேவைக்காகவும், சிலர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.