கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.