முரளிதரனும், ஞானமொழியும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்து கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்து கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில், 2 முறை ஞானமொழி கர்ப்படைந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி சரியாகப் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.