Asianet News TamilAsianet News Tamil

Video: பேய் விரட்டுவதாகக் கூறி பெண்களை முரத்தால் நையப்புடைத்த சாமியார்

சேலம் அருகே காணும் பொங்கலன்று நடைபெற்ற பேய் விரட்டும் வினோத திருவிழாவில் சாமியார் பெண்களை முரத்தால் தாக்கி பேயை விரட்டினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி‌ அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வினோதமாக காணும் பொங்கல் தோறும் முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா  நடைபெற்றது.

திருமணம் கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவதால் இந்த வினோத விழாவில் ஏராளமான பெண்கள் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.