Asianet News TamilAsianet News Tamil

உதகை 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பலூன் திருவிழா… துவக்கி வைத்தார் அமைச்சர் ராமச்சந்திரன்!!

நீலகிரியில் உதகை 200 ஆண்டு நிறைவடைவதையொட்டி நடைபெறும் பலூன் திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 

நீலகிரியில் உதகை 200 ஆண்டு நிறைவடைவதையொட்டி நடைபெறும் பலூன் திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். சுற்றுலா நகரமான உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு நிகழ்ச்சியாக உதகை பர்ன்ஹில் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலூன் திருவிழா இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தியின் நினைவு நாள்… திருச்சியில் அவரது சிலைக்கு காங். கட்சியினர் மரியாதை!!

பத்து நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகையில் முதன்முறையாக வெளிநாட்டு பறவைகளை கண்டு களிக்கும் வகையிலும், அவர்களுக்கு உணவு அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்; அப்துல் வஹாப் நீக்கப்பட்டு மைதீன் கான் நியமனம்

ஒரு பறவை சரணாலயத்துக்கு செல்வது போன்ற புத்துணர்ச்சியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்பி அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Video Top Stories