Asianet News TamilAsianet News Tamil

கோவையில் நள்ளிரவில் கோயில் உண்டியல் உடைப்பு… மர்ம நபர்கள் கைவரிசை!!

கோவையில் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவையில் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயிலில் கோயிலுக்குள் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை அடுத்து சம்பவம் குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories