Asianet News TamilAsianet News Tamil

கோவை கனமழை எதிரொலி; பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை

பொள்ளாச்சி அடுத்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நடைபாதைக்கு மேல் பாலாற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு செல்ல தடை. விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி ஊர்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து பாலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

மேலும் பாலாற்றுக்கு வரக்கூடிய சிற்றோடைகள் வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாலாற்று கரை ஆஞ்சநேயர் கோவில் ஆற்றின் மையப் பகுதியில் இருப்பதால் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 

இதனால் பக்தர்கள் இவ்வழியாக சென்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மேலும் நீர்வரத்து குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் தெரிவித்தனர்.

Video Top Stories