
பொள்ளாச்சியில் 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை
ஏற்கனவே 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட மக்னா யானை தற்போது பொள்ளாச்சி அருகே 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது.
ஏற்கனவே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருப்பதை அறிந்து மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். தற்போது அந்த யானையை சின்ன கல்லாறு வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
