Asianet News TamilAsianet News Tamil

Watch : வீட்டின் கேட்டிற்குள் தும்பிக்கை நீட்டி உணவு தேடிய காட்டுயானை! சிசிடிவி காட்சிகள் வைரல்!

வீட்டின் கேட்டிற்குள் தும்பிக்கை நீட்டி உணவு தேடிய காட்டுயானை, ஒஹோ மணி ப்ளேண்ட் செடியா ! இது வேணாம் என நுகர்ந்து பார்த்து கடந்துபோன காட்டுயானை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
 

கோவையில் உணவு தேடி யானைகள் ஊருக்குள் வளம் வருவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த நான்காம் தேதி கணுவாய் தடாகம் பகுதியில் 4 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் அதிகாலை வந்துள்ளது.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் யானைகள் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் ஒரு யானை மட்டும் தன்னுடைய தும்பிக்கையை வீட்டின் கேட்டிற்குள் விட்டு அங்குள்ள மணி பிளான்ட் செடியை சாப்பிடுவதற்காக முயற்சி செய்கிறது.

ஆனால் சாப்பிடுவதற்கு அந்த செடி பிடிக்காததால் நுகர்ந்து பார்த்துவிட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யானையின் மனநிலையானது சாப்பிடற மாதிரி ஒரு செடியாவது வளர்க்கிறார்களா?? மணி பேளண்ட் செடி சாப்பிட்டு நான் என்ன பண்றது?? அப்படிங்கிற மாதிரி யானை கடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories