தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ.. ராகவ லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ட்ரைலர்

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் டபுள் ஹீரோ போல் சமமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மதுரையில் ரௌடியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் தன்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கூற... இந்த படத்தை வெள்ளைக்காரர்களுக்கு எதிராக திரையரங்கில் வெளியிட முடிவு செய்கின்றனர். விறுவிறுப்பான கதையசம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்பே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.


Related Video