
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாதிய கொடுமைகள்; எவிடென்ஸ் கதிர் ஆவேசம்
சாதிய கொடுமைகள் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திய தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம், தற்போது நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட மாணவன் சக மாணவர்களால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சாதியம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில், சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் சாதி ரீதியிலான பிரச்சினைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
