
ADMK vs DMK
Tamil Nadu assembly debate : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான இரண்டாவது நாள் பொது விவாதமானது நடைபெற்றது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்திற்கு பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பல்வேறு கேள்விகளை எழுப்பி பேசினார். திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த, டிஆர்பி ராஜா, பல 100 ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.