
எங்களிடம் பணம் பறிப்பதற்காகவே சர்ச்சை வீடியோ வெளியிடப்பட்டது! சம்பா ரவை உரிமையாளர்கள் பேட்டி!
கோவையைச் சேர்ந்த ரவி காந்த் என்பவர் தவறான தகவல்களின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக வேறு சில சேனல்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து எங்களது நிறுவன தயாரிப்புகளை சேர்த்து பொய்யான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். கடந்த அறுபது ஆண்டுகளில் எங்களது நிறுவனம் மீது எந்த புகாருமும் கிடையாது. உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது தயாரிப்பில தரம் குறித்து நன்கு தெரியும் என்று மயில் மார்க் சம்பா ரவை உரிமையாளர்கள்கூறினார்கள்.