Asianet News TamilAsianet News Tamil

தூய்மை பணியாளர்களின் கல்களை கழுவி பாத பூஜை செய் நீதிபதிகள் - உளுந்தூர் பேட்டை

உளுந்தூர்பேட்டையில் தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை செய்து சால்வை அணிவித்து கை கைகூப்பி கும்பிட்ட நீதிபதிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப்படுத்துவதற்காக  நகராட்சி நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் நீதிபதிகள் மற்றும் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களை பாராட்டி பேசினர். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்து கையெடுத்து கும்பிட்டு நீதிபதிகள் மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Video Top Stories