திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் ரூ.11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டும் போது அமைச்சர் கே.என் நேரு, விரைவாக கட்டிடம் எழும்பவில்லை என்றால் ஐயரை தான் திட்டுவேன்  என்று நகைச்சுவையாக கூறினார்.

இதை கவனித்த புரோகிதர் அண்ணா நீங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.  நீங்கள் தான் வருங்கால முதலமைச்சர் என்றார். இதனால் பதறிப்போன அமைச்சர், அடுத்த வினாடியே நீ என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவாய் போல என அமைச்சர் கூறியது அனைவரையும் நகைச்சுவையில் அழ்த்தியது.