Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் மாஸ் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி; தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடியை சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து தரைமார்க்கமாக காரில் கோவிலுக்கு பயணித்த பிரதமர் மோடிக்கு சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களை பார்த்த மகிழ்ச்சியில் பிரதமரும் காரில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்துக் கொண்டே கோவிலுக்கு சென்றார். 

Video Top Stories