Video : உதகையில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

உதகை ஆடசோலை பகுதியில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வருவாய் துறை மூலம் மீட்கப்பட்டது.
 

Share this Video

நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட ஆடாசோலை பகுதியில் அரசுக்கு சொந்தமான 12 ஏக்கர் கிராம மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து இருந்தனர் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட நிலம் ஆக்கிரமிப்பு பகுதி என வருவாய்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவுப்படி வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராசியா உஸ்மான் தலைமையிலான வருவாய் துறையினர் 12 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர்.

மேலும் அப்பகுதியில் யாரும் அத்துமீறி உள்ள என்னுடைய கூடாது என அறிவிப்பு போட்டு வைத்தனர்.

Related Video