
O Panneerselvam: கோத்தகிரியில் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் உற்சாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உதகைக்கு வரும் வழியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து உற்ச்சாக நடனம்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள கோத்தகிரி வழியாக வந்த முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி டானிக்டன் பகுதியில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இதனைத் தொடர்ந்து அங்குள்ள எம்,ஜி,ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்பு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உற்ச்சாக நடனம் ஆடினார். அவருடன் புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் நடனம் ஆடினர். பின்பு உதகைக்கு காரில் புரப்பட்டு சென்றார்.