Asianet News TamilAsianet News Tamil

Watch : குன்னூர் அருகே காட்டெருமைகள் மோதல்! - ஒரு காட்டெருமை பலி! வனத்துறையினர் ஆய்வு!

காட்டெருமைகள் மோதிக்கொண்டதில் ஒரு காட்டெருமை உயிரிழப்பு வனத்துறையினர் பிரேத பறிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் காய்கறி விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். நாக்குநேரி பகுதிக்கு செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் குன்னூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெறிவித்தனர்,

இதனை தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனகாப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு மேற்க்கொண்டனர்.

இதில் இரண்டு காட்டெருமைகள் மோதிக்கொண்டதில் ஒரு காட்டெருமை இறந்ததாக தெறிகிறது இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் திவ்யா பீரீத்தி மற்றும் வனத்துறையினர் காட்டெரருமையின் உடலை பிரேதபறிசோதனை செய்து அதே பகுதியில் அடக்கம் செய்தனர்.

Video Top Stories