
குன்னூர் அருகே வீட்டில் சுவர் ஏறி குதித்து பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை; அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்
குன்னூர் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை சிறுத்தை கவ்வி சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் சாய்பாபா கோவில் செல்லும் சாலை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று வீட்டில் வளர்ப்பு பூனையை வேட்டையாடி வாயில் கவ்வி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதே இடத்தில் இரு தினங்களுக்கு முன் இரண்டு கரடிகள் உலா வந்தது சிசிடிவி கேமராவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Add Asianetnews Tamil as a Preferred Source
