Asianet News TamilAsianet News Tamil

Watch : மது குடித்து மயங்கிய 9 வயது சிறுவன்! ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!

மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக இளைஞர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மயக்க நிலையில் உள்ள சிறுவனை காவல்நிலையத்திற்கு தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மயக்க நிலையில் இருந்த சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து பெற்றோர் இந்திரஜித் புகார் அளித்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளதாகவும், இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக மயிலாடுதுறை போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த இளைஞரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அறிவழகனை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார்.

சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக உள்ளது.

Video Top Stories