
ஆய்வின் போது திடீரென கீழே விழுந்த அதிகாரி; நூலிழையில் தப்பிய அமைச்சர் ஏ.வ.வேலு
மதுரை நாயக்கர் மகாலில் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை நாயக்கர் மகாலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் அமைச்சருக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

அப்போது எதிர்பாராத விதமாக சிமெண்ட் சிலாப் உடைந்து அதிகாரி கீழே விழுந்தார். அவர் அருகிலேயே நின்றுகொண்டிருந்த அமைச்சர் ஏ.வ.வேலு நுலிழையில் தப்பினார்.