Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடிக்காக விமான நிலையத்திலேயே மேடை போட்ட அதிமுகவினர்: ரவுண்டு கட்டிய அதிகாரிகள்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை அமைத்த அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்த போது மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு  விதிமுறைகளை மீறி மேடை, பிளக்ஸ் வைத்தது, மதுரை விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளிலும் அதிமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Video Top Stories