Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்துக்குள் கொட்டிய கனமழை.. குடையை பிடித்த பயணிகள்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..

கன்னியாகுமரியில் பெய்த கனமழையின்போது அரசு பேருந்துக்குள் மழை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு  கோதையாறு மலை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த 313 E அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்துள்ளது. இந்த மழையில் பேருந்து உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டி வந்ததால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் குடை பிடித்தபடி பயணம் செய்தனர். 

விடாமல் மழை பெய்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடை பிடித்தபடியே பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய அவலமும் அரங்கேறியது.மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Video Top Stories