
அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!
பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விதை நெல் திருவிழா நடைபெற்றது.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதை திருவிழா நடைபெற்றது இதனை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பாதொடங்கி வைத்தார்.
விதை திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டு வகை காய்கறிவிதைகள், சிறுதானிய விதைகள், நாட்டு வகை மரக்கன்றுகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து விதை பொருட்களை விற்பனை செய்தனர். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Add Asianetnews Tamil as a Preferred Source
