Asianet News TamilAsianet News Tamil

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. கடைசியாக வந்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories