Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளது! - எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
 

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மறைந்த முன்னாள் கவுரவ தலைவர் பாலமோகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் மூத்த தொழிற்சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாலமோகனனுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் அரசும், அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளது, ஆட்சி அதிகாரங்களை இன்றைக்கு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தும் நிலைமையில் உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும் என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், ஆனால் இதற்கு முடியாத சூழ்நிலை புதுச்சேரியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.



நிகழ்ச்சியில் அரசு ஊழிய சம்மேளன நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்

Video Top Stories