Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஆளுநர் பேசுவது வருத்தமளிக்கிறது - கனிமொழி பேட்டி

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசுவது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தத்தார். அப்போது தமிழக ஆளுநர் குறித்த கேள்விக்கு பேட்டி அளித்தார். கனிமொழி கூறுகையில், தமிழக ஆளுநர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். 

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஒன்றிய  அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமானது என கூறினார். பேட்டியின் போது அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Video Top Stories