
ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் விளையாடுகிறது - PTR குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் வியைாடுவதாக தமிழய நிதியமசை்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலும், மதுரையிலும் ஒரே நேரத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், பிலாஸ்பூர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவு பெற்று விட்டது. ஆனால், மதுரையில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வெறும் செங்கல்லை மட்டும் வைத்துள்ளனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் ஆடுவதாக தெரிகின்றது. மேலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு படிப்படியாக நிதியை குறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.