Aero India 2023 : ஏரோ இந்தியா கண்காட்சியில் அசத்திய உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸி !!

ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸி இடம்பெற்றுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள நகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share this Video

ஈபிளேன் (ePlane) நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னையில் உருவாக்கபட்ட நகர்ப்புற ஏர் மொபிலிட்டி ஸ்டார்ட்அப், ஏரோ இந்தியா 2023 இல் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை காட்சிப்படுத்துகிறது. ePlane e200 என முத்திரை குத்தப்பட்ட நிறுவனம், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிகச் சிறிய விமானத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த மின்சார டாக்ஸி, கச்சிதமாக பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சார டாக்ஸியின் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இரண்டு இருக்கைகள் கொண்ட கான்செப்ட் பாதுகாப்பான மற்றும் நிலையான பறக்கும் அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாளும் கணிசமான நேரத்தை சேமிக்க உதவும். ஈபிளேன் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சத்யா சக்கரவர்த்தியிடம் ஏசியாநெட் செய்தி நிறுவனம் பேசியது. அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முதல் முன்மாதிரி வெளியிடப்படும் என்று கூறினார்.முழு வீடியோவை இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க..Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?

இதையும் படிங்க..NIA Raid : 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்

Related Video