PM Modi in Srilanka | இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வது மகிழ்ச்சி- பிரதமர் மோடி

Velmurugan s  | Published: Apr 5, 2025, 4:00 PM IST

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆறு அமைச்சர்கள் வந்து வரவேற்றனர். கொழும்பு நகரில் அனுரா குமார திசநாயகாவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். கொழும்புவில் உரை நிகழ்த்திய மோடி "இது எனது நான்காவது இலங்கை வருகை; எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நாம் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது. 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Read More...

Video Top Stories