
துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் எதற்காக ராஜினாமா செய்தார் ! எம்பி கனிமொழி கேள்வி
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:- ஏன் மறுபடியும் ஒரு தேர்தல் நடை பெறுகிறது என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை..இந்த தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப் பட்டுள்ளது அதனால் தான் அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எம்பி கனிமொழி பேசினார் .
Related Video
Now Playing
Now Playing