
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு கடந்த 20 தினங்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் நல்லக்கண்ணு இன்று பகல் 1.55 மணிக்கு காலமானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.