ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!

Share this Video

Tamil Nadu government employees' marriage advance increased: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தொடர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Related Video