
தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை பறிபோகும் அபாயம் ! மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் !
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.