
துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை சங்கடத்தில் ஆழ்த்திய மாணவிக்கு குவியும் பாராட்டு
அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் யோகேஸ்வரியை பேச வாய்ப்பு அளித்தார். அப்போது கனீர் குரலால் அனைவரையும் கவரும் விதமாக தமிழ் வழியில் பயின்ற அரசு பள்ளி மாணவி என்ற தலைப்பில் பேசி கைதட்டலை பெற்றார். பேச்சின் போது, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மது விற்க்கு அடிமையாகி மதுபான கடைகளில் குடியிருப்பதாகவும், இவர்களால் எப்படி தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளர்களாக்க முடியும் என பேசியது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நெளிய செய்தது.