
பலத்த சூறைக்காற்று கடல் கொந்தளிப்பு காரணமாக சாலை சேதம் மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு
1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓலைக்குடா கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை கடல் கொந்தளிப்பு மற்றும் மண் அரிப்பு காரணமாக சாலை சேதமடைந்து சாலை துண்டித்துள்ளது.