
டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது - சபாநாயகர் அப்பாவு
டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. ஏற்கனவே இது போன்ற அமலாக்கத்துறை செயல்பட்ட போது இரண்டு -மூன்று முறை கண்டிப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது ஆனாலும் அமலாக்கத்துறை இது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அனல் மின் நிலையங்களுக்கு ஏழு எரிதிறன் கொண்ட நிலக்கரியை வழங்குவதாக அதானி குழுமம் தருவதாக தமிழகத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் நாலரை எரி திறன் கொண்ட நிலக்கரியை அதானி குழுமம் வழங்கியது அதுவும் தரமற்றதாக இருந்தது. இதில் 836 கோடி ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.