
எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்துறை அமைச்சரை சந்தித்தேன்! செங்கோட்டையன் பேட்டி
கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பத்திரிக்கை நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் பயணம் செய்கின்ற பொழுது ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன், டெல்லி சென்றவுடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற அனுமதி கிடைக்க கொடுக்கப்பட்டது..அதன் மூலமாக உள்துறை அமைச்சர் ,நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டன என்று பேட்டியளித்தார் .