நாங்கள் வரம்பு மீறி பேச மாட்டோம்....ஒரு மூத்த அமைச்சரே இப்படி பேசலாமா ! செல்வப்பெருந்தகை ஆவேசம்

Share this Video

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஒரு மூத்த அமைச்சர் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா அவர் இப்படி பேசியது மிகவும் வருத்தமாக உள்ளது. நான் மதிக்கக்கூடிய அமைச்சர் பெரும் மரியாதைக்குரியவர் பொதுவெளியில் நான் பேசுவது வருத்தம் அளிக்கிறது. நான் மக்கள் பிரதிநிதி ஏறக்குறைய நான்கரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். என்னை கேட்டுவிட்டு திறங்கள் என்று நான் சொல்லவில்லை எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று தான் நான் கேட்கிறேன் அது என் உரிமை.நான் பத்திரிகையாளர்களை சந்தித்து அதுபோல் பேசவில்லை. நான் பேசியது யாரோ களவு தனமாக எடுத்து செய்தியாக்கி விட்டார்கள். இது கேட்டதே குற்றம் என்று குற்றச்சாட்டு சொன்னால் இதற்கு என்ன பதில். ஆட்சியாளர் என்பது வேறு ஆட்சியாளர் கீழ் அதிகாரிகள் என்பது வேறு. வரம்பு மீறி பேசி இருந்தால் பரவாயில்லை. நாங்கள் எப்போதும் வரம்பு மீறி பேச மாட்டோம் எங்களுக்கு என்று ஒரு வரையறை உள்ளது என்று பேசினார் .

Related Video