நம்முடைய வாக்கை போடுவோம் ...அவர்கள் நமக்கு வாக்கரிசி போடுவார்கள் ! சீமான் அதிரடி

Share this Video

எதை நோக்கி இந்த நாட்டை நகர்த்துகிறீர்கள். நம்ம வாக்கை போடுவோம் அவர்கள் வாக்கரிசி போடுவார்கள்.ஆளுநர் - ஆளுகிற பிஜேபி ஆர்எஸ்எஸ் உறுப்பினர். இந்திய ஒன்றியத்தில் ஆளுகின்ற கட்சியில் எந்த மாநிலத்தில் அதிகாரம் இல்லையோ அந்த இடத்தில் அவர்களது ஆட்களை அமர்த்தி எந்த ஒரு நலத் திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமிக்கப்பட்ட ஒற்றை நபருக்கு இருக்கு என்று எல்லோரும் சேர்ந்து ஒரு சட்டத்தை, தீர்மானத்தை நிறைவேற்றி வரைவு அனுப்பினால் அவர் கையெழுத்து போட்டால் தான் செல்லும் என சொன்னால், இது மக்களாட்சி ஜனநாயகம் ஆட்சி என்று சொன்னால் எப்படி இதை நம்ப முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி இருக்கும் இது மக்களாட்சி என்று எப்படி சொல்ல முடியும். புதுச்சேரியில் ஒரு நலத்திட்டங்களையும் நிறைவேற்ற விடவில்லை கிரண்பேடி. எந்த மாநிலத்தில் பிஜேபி ஆளவில்லையோ அந்த மாநிலத்தில் அவர்களாகவே ஆய்வு செய்யப் போகிறோம் என்று சொல்வது கொடுமைதான் என சீமான் தெரிவித்தார்.

Related Video