
தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டமாக தெரிகிறது - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தேர்தலை முன்னிட்டு இந்த திட்டம் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வாக்குறுதியாக மட்டுமே. மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டமாக, மக்கள் வேதனைகளை விமர்சிப்பதை தாயுமானவராக தன்னை நினைத்துக்கொண்டு இருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே உங்கள் காதுக்கு கேட்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. ஆகவே பெயர் சூட்டினால் மட்டும் பிள்ளைக்கு பெயர் சூட்டுவது மட்டும் முக்கியமல்ல. அந்த பிள்ளையை பெயர் பெறுகின்ற வகையிலே நாம் வளர்க்க வேண்டும். அது போல தான் ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டுவதோடு இந்த அரசினுடைய கடமை முடிந்துவிடவில்லை.