
காஷ்மீர் விவகாரம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சர்வதேச அரசியல் என்பது சாதாரண வாக்கு வங்கி நாடக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் சமூக வலைதளப் பதிவுகள் இடுவோர் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, சிறிதேனும் தேசம் எனும் பற்றுக் கொண்டு பொறுப்பு உணர்ந்து தங்கள் கருத்துகளைப் பகிர வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.