
செய்தியாளரின் கைபேசியை பிடுங்கி அராஜகம் செய்த காவல்துறை!! வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி இருந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடைபெற்றது, அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அஜித் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர் அப்போது காவல்துறை அதிகாரியான வேல்ராஜ் (உதவி ஆய்வாளர்) பால் பாக்கெட்டுகளை வீசி எறிந்தார், செய்தியாளரின் கைபேசியை பிடுங்கி அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகள், செய்தியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .