
MOdi in Rameshwaram
ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை ஓரங்களில் நின்ற பொது மக்களுக்கு காரிலிருந்தே கையசைத்தவாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நடை பெற்ற நிகழ்ச்சியில் புதியதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை மோடி திறந்து வைத்தார். பின்னர் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.