உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்...எங்களை சீண்டி பார்க்காதீர்கள் - பவன் கல்யாண் அதிரடி பேச்சு !

Share this Video

மதுரை முருகன் மாநாட்டில் ஆந்திர துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார். மாநாட்டின்போது முருகன் பற்றியும், இந்துவுக்கு எதிராக பேசுவர்களை கடுமையாக சாடினார். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர். அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சி தலைவர். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள் என ஒரு அரசியல் கட்சி தலைவர் கேட்கிறார். இது பிரிவினையை ஊக்கப்படுத்த கேட்கப்பட்ட கேள்வி. இன்று முருகனை பற்றி கேட்பார்கள். நாளை சிவன், அம்மனை பற்றி கேட்பார்கள். இங்கு ஒரு முஸ்லீம், முஸ்லீமாக இருக்கலாம். ஆனால் இந்து இந்துவாக இருந்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் மதவாதி என அவர்கள் நினைக்கின்றனா். இங்கு நிறத்தை வைத்து பாகுபாடு செய்கின்றனா். இந்துக்களை சீண்டாதீர்கள். "சாது மிரண்டால் காடு கொள்ளாது" அதை புரிந்து கொள்ளுங்கள். அரேபியாவில் இருந்து வந்த மதத்தினர் பற்றி அவர்கள் இப்படி பேச முடியுமா. பிறகு ஏன் இந்துக்களை மட்டும் எப்படி துணிச்சலுடன் பேசுகின்றனா். இங்கு உள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தால் போதும், நம்ம கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி இந்துக்கள் பற்றி பலரும் பேசுகின்றனா். அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்." என்று பேசினார். மேலும் இப்படை தோற்றால் எப்படி வெல்லும் என்றும் ஆவேசமாக பேசினார்.

Related Video