Rohini Theater Issue - நரிக்குறவர்களை அனுமதிக்காதது மிக பெரிய தவறு - கொந்தளித்த பொது மக்கள்!

நரிக்குறவர்களை அனுமதிக்காதது மிக பெரிய தவறு என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Video

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் நேற்று சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த திரைப்படத்தைக் காண நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் டிக்கெட் எடுத்து தங்கள் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்துள்ளனர். ஆனால் அவர்களை அங்குள்ள ஊழியர்கள் படம் பார்க்க அனுமதிக்கவில்லை. இதைப் பார்த்தது அங்கிருந்தவர்கள் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டதோடு, அவர்களுக்காக வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து வேறுவழியின்றி அவர்களை படம் பார்க்க அனுமதித்துள்ளனர். நரிக்குறவர்களை அனுமதிக்காதது மிக பெரிய தவறு என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Video