
குடிநீர் கசிவை சரி செய்யாமல் அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை சேதம், பாஜகவினர் சாலை மறியல்
பல்வேறு பகுதிகளில் குடிநீர் கசிவு, இருந்துள்ள நிலையில் அதனை சரி செய்யாமல் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டதால் குடிநீர் கசிவு மீண்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதமடைந்தது. அதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் ஊத்துக்குளி ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வடக்கு காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.