
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு ! தமிழக அரசு அதிரடி
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு (Nellai Kavin's honor killing case) சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணை பாரபட்சமின்றியும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், வழக்கின் தன்மை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவினின் தாயார் தந்த புகாரின் படி 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.